கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை..!
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 9 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






