பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தை..!
டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த இன்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய இண்டிகோ நிறுவனம் சலுகை வழங்கியுள்ளது.
இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் டெல்லியில் இருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் பிரசவம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இரவு 7.30 மணிக்கு பெங்களூர் வந்திறங்கிய குழந்தைக்கும் தாய்க்கும் இண்டிகோ ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.






