தானியங்கி இயந்திரம் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் திட்டம் தொடக்கம்..!
அரசு பேருந்துகளில் பதிவு செய்ய முன்பதிவு செய்யும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இன்று ஆணையத்தின் முன்பதிவு இயந்திரத்தில் தொலைதூரம் செல்லவிருக்கும் பயணியிடம் எந்த நேரத்திலும் மின்னணு முறையில் qr கோடு மூலம் பணம் செலுத்தி சுலபமாக முன்பதிவு செய்யலாம்.
பேருந்துகளை புறப்படும் நேரம், இருக்கை எண் போன்றவற்றை 60 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் பயணிகளின் வரவேற்பை பொறுத்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அரசு பேருந்துகளின் பயணத் திட்டம் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டது. இணையதள வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி விட்டார்.






