ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வயது 88 நிரம்பிய இவருக்கு மொத்தம் ஆறு மகன்கள் உள்ளனர். அது ஐந்து பேர்ஜார்கண்டிலும் ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 60 முதல் 70 வயதிற்கு இடைப்பட்ட வராக இருந்தனர்.
இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் உள்ள ஒருவர் உறவினரின் உடைய திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு அவர் திரும்பியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய ஓரிரு நாளிலேயே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராணி மருத்துவ காப்பகத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு கொரொனா சோதனை செய்யப்பட்டது.
ஆனால் ஜூலை நான்காம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த தனது தாயின் உடலை அவரது மகன்கள் சேர்ந்து அடக்கம் செய்தனர். ராணி இறுதி சடங்கில் பங்கேற்ற 5 மகன்கள் உட்பட குடும்பத்தினர் ஏழு பேருக்கும் கொரொனா இருப்பது உறுதியானது.
குடும்பத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 8 ஆனது. கொரொனா உறுதி செய்யப்பட்டதால் கோதரர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சகோதரர்கள் அனைவரும் அடுத்தடுத்து இறந்தனர்.
திங்கள் கிழமை ஐந்தாவது சகோதர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதாவது ஜூலை 4-ம் தேதி முதல் ஜூலை 20ம் தேதி வரையிலான 16 நாட்கள் இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக தாய் ராணி மற்றும் அவரது மகன்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கு பங்கு கொள்ளாமல் இருந்தால் இந்த நிலை நடந்திருக்காது.










