குழந்தை கடத்தல் காரர் என நினைத்து திருநங்கை மீது தாக்குதல்..!
சென்னை பல்லாவரத்தில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐடி ஊழியரான திருநங்கையை குழந்தை கடத்தல்காரர் என நினைத்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரில் திருநங்கையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவரை தாக்கியதாக இருவரை கைது செய்ததோடு மேலும் சிலரை தேடி வருகின்றனர்.





