மீண்டும் ஒரு ATM கொள்ளை முயற்சி..!
காஞ்சிபுரம் அருகே தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜம்பேட்டை அருகே தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடிக்கும் முயற்சி நடந்துள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.





