பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சக்கரத்தில் சிக்கி பலி..!
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டு இருந்த மூதாட்டி தவறி விழுந்ததில் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.





