புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி ..!
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.செய்தியாளர்களை சந்தித்த அவர் புனித் ராஜ்குமாரின் மரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் மறுப்பதாக தெரிவித்தார்.
தனது குடும்பமும் அவரது குடும்பமும் ஆரம்ப காலத்தில் இருந்தே நெருக்கமாக இருந்ததாகவும் மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்த தாகவும் குறிப்பிட்டார். புனித் ராஜ்குமார் இழப்பை தாங்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.






