நடிகையிடம் மன்னிப்புக் கேட்டார் நடிகர் பவன் சிங்!
லக்னோவில் பொதுமேடையில் நடிகை அஞ்சலி ராகவிடம் அநாகரிகமாக நடந்த போஜ்புரி நடிகர் பவன் சிங் மன்னிப்பு கேட்டார். கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்த அஞ்சலி, போஜ்புரி திரையுலகில் இருந்தே வெளியேறுவதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, தனது செயல் அஞ்சலியை பாதித்திருந்தால் மன்னித்துவிடுமாறு பவன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






