மகளிர் உரிமை தொகை கிடைக்காததால் தேம்பி தேம்பி அழுத பெண்..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமை தொகை கிடைக்காத பெண் தேம்பி தேம்பி அழுதார். கண்ணாத்தாள் என்ற பெண் கணவனை இழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார்.
அவரின் இரு பெண் குழந்தைகளும் திருமணமாகி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆயிரம் ரூபாய் கிடைக்காத வேதனையில் கண்ணாத்தாள் உதவி மையத்தின் முன்பு கண்ணீர் விட்டு அழுதார்.






