விஜயகாந்துக்கு சிலை வைக்க வேண்டும்: மதுரை மேயருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கடிதம்!
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். விஜயகாந்தின் திடீர் மறைவு செய்தி தொண்டர்கள், ரசிகர்கள் தாண்டி பொது மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலைப் பார்க்க திரண்டு வரும் ஆயிரக்கணக்கான மக்களே அதற்கு சாட்சி. விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள கோயம்பேடு பகுதி முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த மக்கள் விரைந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் மேலும் நெரிசல் ஏற்படும் அபாயம் உண்டான நிலையில், ராஜாஜி மண்டபத்துக்கு விஜயகாந்த் உடலை அஞ்சலிக்காக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.இதனையடுத்து சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பிரேமலதா உள்ளிட்ட விஜயகாந்த் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, விஜயகாந்த் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத் திடலுக்கு எடுத்துவர முடிவு செய்யப்பட்டது. தீவுத் திடலில் இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத் திடலுக்கு இன்று காலை 6 மணிக்கு எடுத்துவரப்படுகிறது.
மதியம் 1.30 மணி வரை அங்கு திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னர் சாலை மார்கமாக விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. மாலை 4.45 மணியளவில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டு நல்லடக்கம் நடைபெறுகிறது.
இதனிடையே விஜயகாந்துக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும், நடிகர் சங்கத்துக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு விருதுநகர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.





