13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்த சீரழித்த 17 வயது சிறுவன்..!
சென்னையில் instagram மூலம் காதல் ஏற்பட்டு 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
ஐயாபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் இருந்த 13 வயது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பொழுது அதில் பேசிய நபர் சிறுமியை அயனாவரம் பேருந்து நிலையத்தில் விடுவதாக கூறியுள்ளார்.
பின்னர் சிறுமியை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பொழுது வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.





