நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பலி..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுனர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவில்பட்டி அருகே திடீரென குறுக்கே நாய் ஓடிவந்ததன் காரணமாக அவர் தடுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.





