160 மீட்டர் உயரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஏறும் நபர்..!
பிரென்ச் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படும் நபர் ஜெர்மனியின் பிராங்க்பர்க் நகரில் 32 மாடி கட்டடத்தில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஏறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ நகரின் கோல்டன் கேட் பாலம், துபாயின் போர்ஜல் கலிஃபா உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கட்டடங்களில் ஏறி சாதனை படைத்தார். 58 வயதான ஏலியன் ராபர்ட் சுமார் 160 மீட்டர் உயரம் கொண்ட கட்டடத்தின் மீது ஏறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்திற்கு கீழே போக்குவரத்திற்கு தடை விதித்து ஏணி, ஆம்புலன்ஸ் உடன் தீயணைப்பு வீரர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் கட்டட உச்சியில் இருந்தபடியே ராபர்ட் கையசைத்தார்.







