பெற்றக் குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய கொடூரத் தாய்..!
வேடசந்தூர் அருகே பிறந்த குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய கொடூர தாயை காவலர்கள் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சீதப்பட்டி ரோட்டில் பெண் குழந்தை ஒன்று தெருநாய்கள் கடித்த நிலையில் இறந்து கிடந்தது.
குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர்கள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய கல்யாணி என்ற பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





