திருப்பூரில் சாலையை கடந்த பெண் மீது மோதிய கண்டெய்னர் லாரி..!
திருப்பூரில் சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்யும் பெண்ணின் மீது கண்டைனர் லாரி ஏறி இறங்கியதில் அவர் இரண்டு கால்களும் நசுங்கியது.
தூத்துக்குடியில் இருந்து திருப்பூர் வந்து கொண்டிருந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதிய பொழுது படுகாயம் அடைந்த சரண்யாவை போலீசார் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.





