ஈரமான சாலையில் அதிவேகமாக வந்து சாலை தடுப்பதில் மோதி சரக்கு வாகனம் விபத்து..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூர் பிரிவில் சரக்கு வாகனம் ஒன்று சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதிக் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் லேசான காயமடைந்தார்.
ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்வதற்காக எடுத்து சென்ற பொழுது இந்த விபத்து நேரிட்டுள்ளது. மழை பெய்திருந்த ஈரமான சாலையில் அதிவேகமாக வந்து திரும்பியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.





