--- --:--:-- --

இன்று வெளியாகிறது 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்..!

1

மிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதேபோல 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

 

கொரொனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் வகுப்புகள் காலதாமதமாக தொடங்கியதால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டன. இந்த இரு தேர்வுகளையும் எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

 

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 9:30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளையும், 12:00 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை அரசு அறிவித்துள்ள www.tn results.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon