பாக்சிங்கில் அசத்தும் நடிகை ரித்திகா சிங்..!
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதி சுற்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங்.
இதன்பின், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆடவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் இணைந்து சிவலிங்கா என நடித்து வந்தார்.மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு அசோக் செல்வனுடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே திரைப்படம் மீண்டும் ஒரு திருப்பத்தை ரித்திகாவிற்கு ஏற்படுத்தியது.
நடிகை ரித்திகா சிங் நடிகையாவதற்கு முன்பே, அவர் ஒரு ரியல் பாக்ஸர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், தற்போது நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்சிங் ஒர்கவுட்டில் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.






