புஷ்பா, புஷ்ப ராஜ்… விடைத்தாளில் வசனம் எழுதிய மாணவன்..!
மேற்கு வங்க மாநிலத்தில் புஷ்பா பட வசனங்களை தேர்வு விடைத்தாளில் மாணவர் எழுதியுள்ளார் .மேற்கு வங்கத்தில் அண்மையில் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விடைத்தாளில் மாணவர் ஒருவர் புஷ்பா புஷ்பராஜ் விடை எழுத போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
புஷ்பா படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் அவ்வப்போது இதுபோன்ற வசனம் ஒன்று பேசுவார். அதை மையப்படுத்தி இந்த மாணவர் தேர்வுத் தாளில் எழுதியுள்ள அந்த விடைத்தாள் இணையத்தில் பரவி வருகிறது.





