வங்கிக்கு வந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்..!
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் மனைவியை வங்கியில் வைத்து அரிவாளால் வெட்டியதாக பரபரப்பு ஏற்பட்டது. கணவன், மனைவி வசித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இருவரும் சில வருடங்களாக பிரிந்த நிலையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் வங்கிக்கு வந்த மனைவியை கணவன் அரிவாளால் வெட்டியுள்ளார். இந்த கொடூர சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது.





