ஓ.பி.எஸ் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்..!
இடைத்தேர்தல் வேட்பு மனு கடிதத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று முடிந்தது.
நேற்று முதல் நாள் அவரிடம் நடந்த விசாரணையில் அவரிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அவர் அதற்கு விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் இரண்டாவதாக இன்றைக்கு நடைபெற்ற விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.





