நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை..!
நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து சிறு தானியங்களை கொள்முதல் செய்து அ கடைகவை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் நியாய விலை கடைகளில் சிறுதானியங்களை சோதனை அடிப்படையில் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ராகி, கம்பு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்கள் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.






