திருப்பூர் மாவட்டத்தில் 15 பள்ளி மாணவர்களுக்கு கொரொனா தொற்று..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகரம் பள்ளியில் 15க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அந்த பள்ளிக்கு ஒருவாரம் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளியில் சமூக இடைவெளி பின்பற்றாதே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.






