கரும்பு லாரியை துரத்திய யானை..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் குட்டியுடன் உலா வந்த யானை வாகன ஓட்டிகளை துரத்திய வீடியோ வெளியாகியுள்ளது. மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பளம் சோதனைச்சாவடி அருகே வீசப்படும் கரும்புக்காக அங்கு முகாமிட்டு உலா வந்த யானைகள் அந்த வழியாக வந்த கரும்பு லாரியை நிறுத்த முற்பட்டது.
லாரி வேகமாக சென்றதால் ஆத்திரமடைந்த யானைகள் சாலையிலேயே நின்று கொண்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அந்த வழியாக வந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்தபோது திடீரென யானை துரத்தியதால் வாகனங்கள் பின்னோக்க ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.






