பள்ளத்தாக்கு அருகே ஊஞ்சலில் விளையாடிய போது நடந்த விபரீதம்..!
ரஷ்யாவின் பள்ளத்தாக்கு அருகே ஊஞ்சலில் அமர்ந்து விளையாடிய பெண்கள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சுலக் எனும் பகுதியில் பள்ளத்தாக்கு அருகே ஊஞ்சல் கட்டி அதில் ஏராளமானோர் விளையாடி வருகின்றனர்.
எந்தவித பாதுகாப்பும் இன்றி தினம்தோறும் ஊஞ்சலில் விளையாடுகின்றனர். அப்போது ஊஞ்சலில் அமர்ந்து இருந்த இரு பெண்கள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
நல்வாய்ப்பாக இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பள்ளத்தாக்கு அருகே ஊஞ்சல் கட்டி விளையாடியது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






