ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்..! சமூக இடைவெளியை மறந்த மக்கள்..!
தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் மக்கள் கூட்டமாக திரண்டதால் வருவாய்த்துறையினர் விற்பனையை நிறுத்தினார். புதிதாக கடை திறக்கப்பட்டதால் சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி இன்றி மக்கள் வந்தனர். இதை அறிந்த வருவாய்த்துறையினர் கடை உரிமையாளரிடம் சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை செய்ய அறிவுறுத்தினார்.
ஆனால் தொடர்ந்து மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததால் விற்பனையை உயர்த்தி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.







