கள்ளக்குறிச்சியில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து தற்கொலை..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தந்தையும், மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் மது அருந்துவதை கண்டித்து அவரது மகன் குபேந்திரன் தாக்கியுள்ளார்.
ஊரார் முன்னிலையில் மகன் அடித்ததால் சீனிவாசன் மதுவில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உயிருக்கு ஆபத்தாக இருப்பதை அறிந்து குபேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சீனிவாசனும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.







