இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50 ஆயிரம் உதவித் தொகை..!
இளம் எழுத்தாளர்களுக்கான புதிய திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். 30 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகள் இந்தியா மற்றும் அதன் பண்பாட்டை உலக அளவில் அறியும்படி இலக்கியப் படைப்புகளாக மாற்றுவதற்கு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
75 படைப்பாளிகளுக்கு ஆறு மாத காலத்திற்கு மாதம்தோறும் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 75 இளம் எழுத்தாளர்கள் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.






