--- --:--:-- --

நடிகை ஆன்ட்ரியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு..!

9

பாடகியாக இருந்து நடிகையானவர் தான் ஆண்ட்ரியா. ஆங்கிலோ- இந்தியன் பெண்ணான நடிகை ஆண்ட்ரியா அரக்கோணத்தில் பிறந்தார். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

சிறுமியாக இருந்தபோது ஒருநாள் கூட என் பெற்றோர் என்னை திரைப்படத்திற்கு அழைத்து செல்லவில்லை. எனவே என் கவனம் படிப்பதில் சென்றது. குழந்தைப் பருவத்தில் மார்க் ட்வைன் எழுதிய புத்தகங்களை என்னை நல்வழிப்படுத்தியது.

 

இந்த உலகத்திற்கு அப்பால் உள்ள விஷயங்களை புத்தகம் மூலமே அறிந்து கொண்டேன். சென்னையில் உள்ள குருநானக் கல்லூரியில் பயின்றவர் ஆண்ட்ரியா. தற்போது யோகாசனம் செய்வதில் ஆர்வமாக உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon