தமிழகத்தில் இன்றும், நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..!
தமிழகத்தில் இன்றும், நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கொரொனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்படி மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்றும், நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







