மாநிலங்களுக்கு 15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு..!
நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் முதலீட்டு செலவினங்களுக்காக 15,000 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி உதவி வழங்கியுள்ளது.
50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக கொடுத்து உதவியது. கடந்தாண்டு தொற்று காலத்தில் மாநில அரசுகளின் முதலீடு செலவினங்களுக்கு வழங்கிய நிலையில் தற்போது பல்வேறு மாநில அரசுகளிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த ஆண்டும் 15,000 கோடி ரூபாய் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.
முதலீடு செலவினங்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







