இரண்டாவது கொரொனா டோசை போட்டுக் கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். கடந்த மார்ச் 9ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய காவிரி மருத்துவமனையில் அவருக்கு முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இன்றைக்கு இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டுள்ளார்.
கிட்டத்தட்ட 40 நாள் இடைவெளிக்கு பிறகு கோவிசீல்டு மருந்து செலுத்தியுள்ளார். மு க ஸ்டாலின் தனது கொரொனா தடுப்பூசியை மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி எடுத்துக்கொண்டார்.
அதன்பின்னர் 44 நாட்களுக்குப் பிறகு தவணை காலம் முடிந்து இன்று இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்கிறார். 68 வயது இருக்கக்கூடிய திமுக தலைவர் ஸ்டாலின் கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார்.






