அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்..!
அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவினருக்கு கொரொனா பெருந்தொற்று வந்ததன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது சீரான நிலையில் மீண்டும் தனது குழுவினருடன் அண்ணா படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பின்போது அந்த பட குழுவினருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.






