இரண்டாவது கொரொனா அலை வீசத் தொடங்கி இருப்பதாக எச்சரிக்கை..!
மகாராஷ்டிராவில் இரண்டாவது கொரொனா அலை வீசத் தொடங்கி இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கூட்டம் நடத்தப்படும் ஆலோசனையின் போது மகாராஷ்டிராவில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
பூனே, தானே, நாக்பூர் போன்ற பல்வேறு முக்கிய நகரங்களில் இரவு நேரஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்று முக கவசம் அணிவதில்லை என்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம் மகாராஷ்டிரா அரசுக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.






