சாதி பார்த்து ஓட்டுப் போடாமல் சாதிப்பவனா என்று பார்த்து ஓட்டுப் போட வேண்டும்..!
ஆண்டு கொண்டிருந்த அரசு இரண்டு இடையூறு செய்யாமல் இருந்திருந்தால் தன் சொத்து மதிப்பு 200 கோடியைத் தாண்டியிருக்கும் என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை தாதகாப்பட்டி பகுதியில் தமது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் தம்மை தவறு செய்ய விடாமல் தடுத்து ஆளும் கட்சியினர் இழப்பை ஏற்படுத்தினார்கள் என்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பிய கமலஹாசன் அரசியல் செய்வதற்காக நேர்மையாக சம்பாதிப்பதாக கூறினார். சாதி பார்த்து ஓட்டுப் போடாமல் சாதிப்பவனா என்று பார்த்து ஓட்டுப் போட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.






