மும்பையில் ஏற்பட்ட மின்தடைக்கு சீன அமைப்பின் சதி காரணமா ?
கிழக்கு லடாக்கில் எல்லை பதற்றம் நிலவிய சூழலை பயன்படுத்தி இந்திய மின் தொகுப்பு வினியோகத்தை சீர்குலைக்க சீனா சதி செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபரில் மும்பையில் மிகப்பெரிய அளவிலான மின் தடை ஏற்பட்டு நகரமே ஸ்தம்பித்துள்ளது.
ரயில் போக்குவரத்து முடங்கியது உடன் காலகட்டத்தில் பல மருத்துவமனைகளையும் மூடும் நிலையும் உருவானது. சீனாவிலுள்ள பிரிடை கோட் என்ற அமைப்பு மால்வேர் எனப்படும் பொருளை இந்திய மின் தொகுப்பு படங்களில் செலுத்தியது காரணமாக இருக்கலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆண்டு துவக்கம் முதல் இந்திய நிறுவனங்களுக்கு எதிரான சதி வேலைகளில் சீன அரசின் ஆதரவு பெற்ற சில அமைப்புகள் ஈடுபட்டனர் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.






