காளியம்மன் கோவிலில் இருந்து கொலுசு சத்தம்..! பக்தர்கள் செய்தது என்ன..?
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே புறநகரில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் இருந்து கொலுசு சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று மாலை நடை அடைக்கப்பட்ட பின்பு கோவிலுக்குள் இருந்து கொண்டு சத்தம் கேட்டதாக கூறி அங்கு வந்த பக்தர்கள் பயபக்தியுடன் காளியம்மனை வணங்கியுள்ளனர்.






