குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவற்றிற்கான சிறப்பு முகாம்..!
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கான சிறப்பு முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம் சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணிக்கு தொடங்கியது.
பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கைபேசியில் பதிவு செய்தல் உள்ளிட்ட மாற்றங்களை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார்கள் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.






