சசிகலா நலம் பெற வேண்டி வாழ்த்தியதற்கு விளக்கம் அளித்துள்ள ஜெயபிரதீப்..!
மனிதாபிமான அடிப்படையிலேயே சசிகலா நலம் பெற வேண்டி வாழ்த்துவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் பிரதீப் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்று வந்தபோது அவர் நலம் பெற்று அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயபிரதீப் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து வேண்டியதாகவும் கூறியுள்ளார்.






