இனி சுங்கச்சாவடிகளில் மின்னணு முறை அறிமுகம்..!
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்ட்டிரெக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறை கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி ஜனவரி 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் அறிவித்தார்.
இதன் மூலம் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டணத்தை செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.







