திண்டுக்கலில் நாயை விழுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் நாயை விழுங்கிய படி சுருண்டு கிடந்த மலை பாம்பினை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ரோப் கார்னர் நிலையம் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் 15 அடி நீள மலைப் பாம்பு நாயை விழுங்கியதாக கிடைத்த தகவலில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதனை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.







