எஸ்.பி.பி. கடைசியாக இசையமைத்து பாடிய பாடலும் கொரோனா விழிப்புணர்வு பாடல் தான்!!
மறைந்த எஸ்.பி.பி. இசையமைத்து பாடிய கடைசி பாடல் கொரோனா விழிப்புணர்வு பற்றிய பாடலாகும். கடைசியில் அதே கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டாலும், மூச்சுத் திணறலால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் அரை நூற்றாண்டு காலம் தனது இனிய குரல் வளத்தால் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் எஸ்.பி.பி. ஆவார். சிறந்த பின்னணி பாடகராக மட்டுமின்றி 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இசையமைப்பாளராகவும் அவதாரமெடுத்தவர் எஸ்.பி.பி. ஆவார். 40 ஆயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்த எஸ்.பி.பி., 6 முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றவர்.
எஸ்.பி.பி. கடைசி பாடல்
கொரோனா விழிப்புணர்வு தான்!
இந்த கொடிய கொரோனா காலத்தில் அவர் கடைசியாக பாடிய பாடலும் கொரோனா விழிப்புணர்வு பற்றியது தான் என்பது பெரும் சோகம். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அவரே இசையமைத்து இந்தப் பாடலை பாடியிருந்தார். கடைசியில் கொரோணா தொற்றுக்கு எஸ்.பி.பி. ஆளாகி மீண்ட போதும் பிற நோய்கள் அவரை கொள்ளை கொண்டு போனது தான் பெரும் சோகம்.







