சுஷாந்த் சிங் ராஜ்புத்காக போதை பொருள் வாங்கியதாக பாலிவுட் நடிகை ரியா கைது..!
தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத்காக போதை பொருள் வாங்கியதாக பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலிவுட் நடிகர் சுசாந்த்தின் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. போதை பொருள் பயன்படுத்துவதாக கூறப்பட்ட நிலையில் அவரது காதலியான சக்கரவர்த்தியிடம் போதை பொருள் தடுப்பு காவல் துறையினர் விசாரணை நடத்துவதற்காக போதை பொருள் வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போதை பொருள் தடுப்பு காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ரியா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை தள்ளுபடி செய்த நீதிபதி அவரை செப்டம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ரியாவின் சகோதரர், மேலாளர், வீட்டு உதவியாளர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.







