பப்ஜி விளையாட முடியாத காரணத்தால் மாணவர் தற்கொலை..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பப்ஜி விளையாட முடியாத காரணத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலங்காயம் கோமுட்டேரி பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாசன் பதினொன்றாம் வகுப்பு நிறைவு செய்துள்ளார். இரவும் பகலும் தொடர்ந்து விளையாடிய மாணவரை கண்டித்து அவரது தந்தை செல்போனை பறித்து வைத்துள்ளார்.
இதற்கிடையே பப்ஜி செயலிக்கு அரசு தடை விதித்தது விளையாடாமல் இருந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.






