திருவாடானையில் ரம்புட்டான் பழம் சீசன் தொடங்கியதையடுத்து விற்பனை அதிகரிப்பு..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆங்காங்கே சாலையோரங்களில் பழங்கள் விற்கபபட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காணப்படும் ரம்புட்டான் பழங்கள் மலைப்பிரதேசங்களில் வளரக்கூடியவை. இந்த பழங்களை சாப்பிடுவதால் உலுக்கு குளிர்ச்சியை தரும் என்றும், மருத்துவ குணம் உள்ளது என்றும் கூறுகிறார்கள். இந்த பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்றும் அப்படி சாப்பிட்டால் சளி உபாதைகளுக்கு ஆளாக்கப்படுவீர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ரம்புட்டான் பழம் தோளும் அதன் உள்ளே இருக்கும் கொட்டையும் கசப்புத் தன்மையுடையது. இரண்டுக்கும் நடுவில் இருக்கும் சுலை மிகவும் இனிமையாக நுங்கு போல் இருக்கும் என்றும் தெரிவித்தனர். இந்த பழம் கிலோ 80ல் இருந்து 160 வரைக்கும் மற்ற கொய்யா பழம் கியோ 50க்கும் விற்கப்படுகிறது இப்பகுதியில் இந்த படங்கள் காணப்படுவது அரிதான ஒன்றாகும்.







