தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இன்று 4 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 4,343 தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.
“அதேவேளையில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் 3,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 56,021 பேர் குணமடைந்துள்ளனர்”






