தமிழகத்தில் இன்று கொரோனாவால் 37 பேர் பலி: 2,710 பேருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்று இதுவரை இல்லாத அளவில் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 1358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 34,112 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 9,19,204பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது.






