காவலர்களே கள்ளத்தனமாக மது விற்பனை செய்த அவலம் – தட்டிக்கேட்ட தலைமை காவலரை அடித்து உதைத்த காவலர்கள்
காவலர்களே கள்ளத்தனமாக மது விற்பனை செய்த அவலம் சென்னையில் அரங்கேறியுள்ளது. அதனை தட்டிக்கேட்ட தலைமை காவலர், மது விற்பனை செய்த காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு மது பான கடைகள் மூடிய நிலையில், காவலர்கள் ஜான் பிரிட்டோ மற்றும் கார்த்திக் ஆகியோர், டி.பி சத்திரம் காவலர் குடியிருப்பில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட தலைமை காவலர் வெங்கடேஷ்வர ராவ், இவர்களால் தாக்கப்பட்டார்.







