கொரோனா சோதனையின் போது தப்பியோடிய மாணவி
சீனாவில் கொரொனா அறிகுறிகளோடு இருந்த மாணவி பேருந்தில் இருந்து தப்பி ஓடிய போது கைது செய்யப்பட்டார். சீனாவை சேர்ந்த மாணவி ஒருவர் ஜெர்மனியில் படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை விமானம் மூலம் நாடு திரும்பிய அவர் உள்ளிட்ட பயணிகளை போலீசார் சோதனைக்காக பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி திடீரென ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார். இதனை கவனித்த போலீசார் விரட்டிச் சென்று அந்த மாணவியை மடக்கிப்பிடித்து முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.






